'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' திருநாள் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து!!

 
aiadmk

'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்து செய்தியை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள குறிப்பில்,   "அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் 9-வது நாளில் ஆயுத பூஜையும், பத்தாவது நாளில் விஜயதசமியும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

ops eps

ஆதிபராசக்தியே துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும் ; லக்ஷ்மி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும் ; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லக்ஷ்மி தேவியையும் ,கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன.  அவரவரது தொழிலின் மேன்மையை போற்றும் வகையில் மக்கள் தத்தமது தொழில் கருவிகள் எல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளை ஆயுத பூஜை ஆகும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது இயற்கை நியதி வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும்.



செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையும் ,விஜயதசமியும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் எங்களது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம்"  என்று குறிப்பிட்டுள்ளனர்.