இருக்கை விவகாரம் - அதிமுகவினர் அமளி; சபாநாயகர் விளக்கம்!!

 
appavu

 எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

eps

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம்;3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள்  செய்யவில்லை. துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம்  என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

appavu

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு , “நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை, இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்புகாக நடக்கவில்லை, சட்டப்படி நடக்கிறேன்  சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக,  சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் பேசி வரும்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதவாளர்கள் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு , அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.