கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மேலும் 2 இடங்களில் போட்டி - ஓபிஎஸ் அதிரடி!

 
Ops

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மேலும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். . இந்நிலையில், நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பு வேட்பாளரை இன்று அறிவித்தார். அதன்படி புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவித்தார். 

இந்த நிலையில் தற்போது மேலும் 2 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் தொகுதியில் 2 வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார். கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜ் மற்றும் காந்திநகர் தொகுதியில் கே.குமார் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.