ஏப்.18ல் இப்தார் விருந்து அளிக்கும் ஓபிஎஸ்..

 
ops


வருகிற 18ம் தேதி எழும்பூரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து முன்னாள்  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளுள் ஒன்றான நோன்பிருத்தல் கடைபிடிக்கப்படும் புனித மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

ஏப்.18ல்  இப்தார் விருந்து அளிக்கும் ஓபிஎஸ்..

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இப்தார் விருந்து அளிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.