தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

 
மழை மழை

தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.