தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட ஆணை - காங்கிரஸ் வரவேற்பு

 
tn

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று  தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

election commision

எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டது.  அத்துடன் தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. 

supreme court

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை தனது சமூகவலைதள பக்கத்தில், தேர்தல் பத்திரம் விபரங்களை நாளை மாலைக்குள் (மார்ச் 12) வெளியிட வேண்டும் என்ற  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றேன். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இத்தீர்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.