இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

 
Pakistan Pakistan

இந்தியாவின் உத்தரவை அடுத்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சார்க் விசா ஒப்பந்த‌த்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும் மத்திய வெளிறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவின் உத்தரவை அடுத்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்தியாவில் இருந்து அட்டாரி - வாகா எல்லை வழியாக தங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்கின்றனர். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் வெளியேறி வருகின்றனர்.