16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை - மத்திய அரசு அதிரடி!

 
Pak Pak
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து 
16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து 
16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக ஆத்திரம் மூட்டும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு தடை
 விதிக்கப்பட்டுள்ளது.