கடலூரில் ஊராட்சி தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி கொலை!!

 
gb

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn 

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் 5 பேர் கொண்ட கும்பல்  மதியழகனை ஓட ஓட வெட்டிக் கொன்றது .  

murder

ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கொல்லப்பட்ட தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார் , அவரது  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் 2020இல் தாழங்குடாவில் மதிவாணன் என்பவர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகவும் மதியழகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

murder

எனவே மதியழகன் ஏற்கனவே மதிவாணன் கொலை வழக்கில் தொடர்பில் உள்ளவர் என்பதால் பழிவாங்கும் நோக்கத்துடன் அவர் கொல்லப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.