ஓபிஎஸ் தலைமையில் வருகிற 24-ம் தேதி திருச்சியில் மாநாடு - பண்ருட்டி ராமச்சந்திரன் தகவல்

 
Panruti ramachandran

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வருகிற 24-ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெறும் என முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  எடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு தொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியான பொதுக்குழு. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன.  அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் பிரியக்கூடாது என்பதால் தான் ஓ.பன்னீர்செலமும், டிடிவி தினகரனும் தங்களது தரப்பு வேட்பாளர்களை வாபஸ் பெற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கு எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது.  

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வருகிற 24-ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை உள்ளார். இவ்வாறு முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.