108 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய பாப்பம்மா பாட்டி

 
tn

108 வயதான  பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். 

tn

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.   வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டியில் 108 வயதிலும் வரிசையில் நின்று  பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி ஜனநாயக கடமையை ஆற்றினார்.