போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அறிவிப்பு

 
போராட்டம்

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். 

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், காலையில் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.