மெட்ரோவில் பிப்ரவரி மாதத்தில் 31.86 லட்சம் பேர் பயணம்!

 
metro

மெட்ரோவில் பிப்ரவரி மாதத்தில் 31.86  பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும்,  மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மொத்தம் 25 லட்சத்து 19 ஆயிரத்து 252 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை மொத்தம் 31 லட்சத்து 86 ஆயிரத்து 653 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

metro

அதிகபட்சமாக 28ம் தேதி அன்று ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 252 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் கோடு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி 79 ஆயிரத்து 179 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.  பயணச் சீட்டு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 48 ஆயிரத்து 222 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

metro

மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர்  குறியீடு பயணச் சீட்டில் கடந்த  2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழக்கம்போல் வழங்கிவருகிறது.  மெட்ரோ ரயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.