பசும்பொன்னில் ஒருவர் வெட்டிக்கொலை!

 
women murder by her friend family

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முருகன்(44) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Woman found murdered, husband suspected - KERALA - CRIME | Kerala Kaumudi  Online

நேற்று 28ம் தேதி தேவர் குருபூஜைக்கு ஜோதி தூக்கிக்கொண்டு ஓடும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 4 பேர் கொண்ட கும்பலால் முருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற கமுதி காவல்துறை, வழக்கு பதிவு செய்து முருகனின் உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து பரமக்குடி கோட்டாட்சியர் முருகன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

நாளை முதல்வர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவதால், இறந்த முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை தேவர் குருபூஜை நடைபெறவுள்ள சமயத்தில் அங்கு நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.