மக்கள் தேர்தல் விடுமுறையை கொண்டாடி விடுகின்றனர் - தமிழிசை கவலை

 
tamilisai

"வெள்ளி மற்றும் திங்களில் தேர்தல் வேண்டாம். மக்கள் விடுமுறையை கொண்டாடி விடுகின்றனர்" என்று தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது தொடர்பான கேள்விக்கு தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.  இதுதொடர்பாக தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விட, வாக்காளர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும்; சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவிதம் குறைவது கவலை அளிக்கிறதுபாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது; வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதை தாங்களே சரிபார்த்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உரிய பலன் தரவில்லை.

Tamilisai

தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் தொகுதியின் 13ஆவது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் பாஜக முகவர்களை தாக்கி வெளியில் அனுப்பிவிட்டு கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.