."திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது" - ஈபிஎஸ் விமர்சனம்!!

 
ep

விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியை அதிமுக அரசாங்கம் அமைத்தது  என்ற சிறப்பை பெற்றோம் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

EPS

சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மோசமான ஆட்சி என்பதை தமிழ்நாடு மக்கள் உணர்ந்துள்ளனர். திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனையே மிஞ்சியுள்ளது. இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் என்ன நன்மையை அனுபவித்தார்கள்?

eps

ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும்  நிறைவேற்ற படவில்லை; தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் கவலையில்லை இல்லாத அரசு திமுக ;நியாய விலைக் கடைகளில்  ஏழை, எளிய மக்களுக்கு முறையே பொருட்கள்  வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், வன்மையாக கண்டனங்கள். அதிமுக ஆட்சியில் திட்டமிட்டுதலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தது; விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியை அதிமுக அரசாங்கம் அமைத்தது  என்ற சிறப்பை பெற்றோம். திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும்” என்று தெரிவித்தார்.