சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100% உயர்வு!

 
construction

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி மன்றத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வரும் 10ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது

chennai corporation

சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்  கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. வருகிற 10ஆம் தேதி முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.