கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது..

 
கேரளா ரயில் தீ வைப்பு

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் இடையே சென்ற  ஓடும் ரயிலில்,  மர்ம நபர் ஒருவர் சகபயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.  தீ பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதற்குள்ளாக தீப்பற்றிய பயத்தில், ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் ஓடும்  ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது..

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான  நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டு போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.  இந்த  தனிப்படை அமைத்து  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலீஸார்,   கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபரை உத்தரபிரதேசத்தில் கைது செய்திருக்கின்றனர்.  ஹாருக் சைபி என்கிற அந்த நபரை உத்தரபிரதேசம் மாநிலம் புலந்தசஹர் பகுதியில் வைத்து கேரள போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.  கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஏதேனும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரா? அல்லது முன்விரோதம் காரணமாக இத்தகைய செயலில் ஈடுபட்டார என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.