"சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த திட்டம்" : அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

கோடை விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

school

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில்,  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததன் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி,  பள்ளி திறப்பை ஜூன் 12ஆம் தேதிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒத்தி வைத்தார்.

School Education

 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணிநேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பாடங்களை விரைவில் முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்" என்றார்.