சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

 
modi

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும் வகையிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது. சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.  

இந்த நிலையில், சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவைவ தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக சென்னை-நெல்லை இடையிலான வந்த பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். சென்னை-நெல்லை உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.