திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

 
modi

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ளார். விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வந்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

modi

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதித்டாக கட்டப்பட்டுள்ள முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார்.  60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்ட இந்த புதிய விமான முனையம்,  ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.