தமிழக பயணத்தை நிறைவு செய்து டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

 
modi

3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை நிறைவு செய்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். 

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன் தினம் தமிழகம் வந்தார். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி மூலவரை தரிசனம் செய்தார்.  இதனையடுத்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். இதனையடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடினார். இதனை தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு நடைபெற்ற பஜனையிலும் பங்கேற்றார். இன்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு செய்தார். முன்னதாக அரிச்சல் முனை கடற்கடை பகுதியில் மலர்களை தூவி பிரதமர் மோடி வழிபாடு செய்தார். 

modi

இந்த நிலையில், தமிழக பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை நிறைவு செய்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வந்த பிரதமர் மோடி மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.