டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

 
modi

டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றார். 

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்ட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளனர். 


இந்த விழாவின் போது பேசிய பிதமர் மோடி அனைவருக்கு  “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்“ என தமிழில் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.” நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் எனும் பொருள் கொண்ட  மேற்கோள் காட்டி பேசினார்.