சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த் - பிரதமர் மோடி புகழாரம்

 
modi

சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதித்டாக கட்டப்பட்டுள்ள முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார்.  60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்ட இந்த புதிய விமான முனையம்,  ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

modi

இந்த விழாவில் கேப்டன் விஜயகாந்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர். ஒரு அரசியல்வாதியாக அவர் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அவரின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.