மனதின் குரல் நிகழ்ச்சியில் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர். ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய வேலு நாச்சியார் அவர்கள் கணவர் கொலை செய்யப்பட்டார். இராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எப்படியோ எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். பிறகு முழுத் தயாரிப்போடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார். மிகவும் நெஞ்சுரத்தோடும் உறுதிப்பாட்டு சக்தியோடும் போரிட்டார்.
மனதின் குரல்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 31, 2023
அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர்
ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய வேலு நாச்சியார் அவர்கள் கணவர் கொலை செய்யப்பட்டார்
இராணி… pic.twitter.com/5gs2uAfuTi
ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், மருது சகோதரர்கள், அதாவது தனது தளபதிகளோடு இணைந்து ஒரு படையை உருவாக்கி, பல ஆண்டுகள் வரை அதை வலுப்படுத்தினார். என்னுடைய சகோதர சகோதரிகள் இன்றும் கூட தமிழகத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் பெயரை நெஞ்சில் பதித்துப் போற்றி வருகிறார்கள் என கூறினார்.