தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு!

 
Modi

பிரதமர் மோடி கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலுருக்கு வந்தடைந்தார். 

2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.  பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி நிலையில் மதுரையில் ட்ரோன்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் மாதப்பூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூருக்கு வந்தடைந்தார். சூலூர் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றடைகிறார் பிரதமர் மோடி.