கல்வி அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

 
modi

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ளார். விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வந்துள்ளார்.  இதனை தொடர்ந்து அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

modi

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:  இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.  பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன் . பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது . பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின.  20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகங்களைகளை தொடங்கினார். பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி பெறுகிறது. கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் என கூறினார்.