தமிழக வருகை - டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்த பிரதமர் மோடி

 
modi

தமிழக வருகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்துள்ளார். 

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழகத்திற்கு  வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இது இந்தியாவின் 11வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.  தொடர்ந்து  விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,  பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில்,   ரூ.294 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை,  தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரெயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.    

இந்த நிலையில், தமிழக வருகையை முன்னிட்டு பிரதமர் மோடி, தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் தமிழக பயணம் தொடர்பாக தமிழில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:   சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்". இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.