தொடரும் கைதுகள் : மத்திய, மாநில அரசுகளை சாடும் அன்புமணி

 
pmk

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

pmk

ராமேஸ்வரம் மீனவர்கள்  இரணைதீவுஅருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகை கைப்பற்றிய இலங்கை கடற்படை மீனவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையே விடுவிக்காத நிலையில், மேலும் தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். கடந்த 23 நாட்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், 21பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

fisher

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள்  8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்!  பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இந்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டும் கூட தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்! சிங்களக் கடற்படையினரால் இப்போது கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார்.