"ஏரியா சபை வார்டு சபைகளுக்கு நிதி அதிகாரத்தை வழங்குங்க" - அன்புமணி வலியுறுத்தல்!!

 
pmk

தமிழ்நாட்டின் ஏரியா சபைகளும்,  வார்டு சபைகளும் மக்கள் நலப் பணிகளை தாமே தேர்ந்தெடுத்து செயல்படுத்துவதற்கான நிதி அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று அன்புமணி வலியறுத்தியுள்ளார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அதிகரிகளுடன் 3 நாட்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.  அதில் பல முக்கிய அம்சங்கள் குறித்து பேசிய முதல்வர், "மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் களையப்படும்" என்றார். 

stalin

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி , "மாநகராட்சி, நகராட்சிகளில், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையிலும் https://bit.ly/UrbanPMK, அதன்பின்  முகநூல் பதிவிலும் பாமக வலியுறுத்தியிருந்தது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி! தமிழ்நாட்டின் நகரங்களில் ஏரியா சபைகள் & வார்டு குழுக்களை அமைக்கும் சட்டம் (Tamil Nadu Municipal amendment Act) 2010-லேயே கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை செயல்படுத்தும் விதிகளை 11 ஆண்டுகள் கடந்தும் வெளியிடவில்லை. 

pmk

இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக விதிகளை வெளியிட வேண்டும்.  பெங்களூருவில் வார்டுக்கான திட்டங்களை வார்டு குழுக்களே தீர்மானிக்கின்றன.  அதைப்போலவே, தமிழ்நாட்டின் ஏரியா சபைகளும்,  வார்டு சபைகளும் அவற்றின் பகுதிக்கு தேவையான மக்கள் நலப் பணிகளை தாமே தேர்ந்தெடுத்து செயல்படுத்துவதற்கான நிதி அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.