பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

 
ramadoss

பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பை நம்பித் தான் உழவர்கள் பொங்கல் கரும்பை சாகுபடி செய்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் உற்பத்திச் செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது. 

மேலும் உயரம் தொடர்பாக  எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு உழவர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.