வீரப்பன் மகளுக்கும் பாமக பிரமுகருக்கும் இடையே வாக்குவாதம்..!!

 
tn

தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இன்று  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்களும் ,திரை பிரபலங்களும் ,பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

rr

 இந்த சூழலில் சேலம் மேட்டூர் அருகே வாக்களிக்க வந்த கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான  வித்யா ராணி உடன் பாமக பிரமுகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வித்யா ராணி உடன் அவரது ஆதரவாளர்களும் வாக்கு சாவடிக்கு உள்ளே வந்ததற்கு பாமக பிரமுகர் கோவிந்தன் எதிர்ப்பு தெரிவித்தார்.

gb

இதனால் அங்கு வாக்குவாதம் முற்றி பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.