‘அன்புமணி என் உயிரை மட்டும்தான் எடுக்கல’ - மன வேதனையுடன் பேசிய ராமதாஸ்

 
ramadoss ramadoss

வடலூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாமக கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி செயற்குழு கூட்டப்பட்டு அதன் பின் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வடலூர் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற்து இதில் பாமக கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது. “பாமக கட்சியை 46 ஆண்டுகாலமாக தொடர்ந்து பாடுபட்டு கொண்டு வந்தது நான். கல்வி, தொழிலில் மேலும் முன்னேற நாம் பாடுபட வேண்டியது இருக்கிறது உழைக்க வேண்டியது இருக்கிறது, போராட வேண்டியது இருக்கிறது. அந்த வகையில்  டிசம்பர் 12ஆம் தேதி நமது உரிமைகளை மீட்க போராட இருக்கின்றோம்.

சினிமாவில் கூறுவார்கள் எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்னை போல இருப்பான் என... ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய உயிரை தான் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான். உரிமையை பறித்தான். நான் சிந்திய வியர்வை பறித்தான். உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில் தான் இன்றைக்கும் டெல்லி  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சூழ்ச்சியினால் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வன்னிய மக்கள் பிற சமூகத்தினர் பிற கட்சிகள் எல்லாம் அவருடைய சூழ்ச்சியை புரிந்து கொண்டார்கள். நீ எந்த கோர்ட்டுக்கு போனாலும் இந்த ராமதாசை தோற்கடிக்க யாராலும் முடியாது. மக்கள் என் பக்கம் உள்ளனர். டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு அந்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்