சென்னையில் டிச.7ம் தேதி பாமக மாவட்ட தலைவர், செயலர்கள் கூட்டம்- அன்புமணி ராமதாஸ்

 
அன்புமணி ராமதாஸ்

சென்னையில் 7-ஆம் தேதி பா.ம.க. மாவட்ட தலைவர், செயலர்கள் கூட்டம் என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சாதி என்பது அழகான சொல் - அன்புமணி ராமதாஸ் – News18 தமிழ்


இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளிய்ட்டுள்ள அறிக்கையிக்,  “ பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் & மாவட்ட தலைவர்கள் கூட்டம் வரும் திசம்பர் 7&ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்வர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பொருள்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் பா.ம.கவின் அனைத்து மாவட்ட செயலர்கள் & மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.