இந்திய கம்யூ. கட்சி அலுவலகம் தாக்குதல் - 6 பேரிடம் விசாரணை

 
tn

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் குறித்து தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாம் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சமப்வம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் தேடி வந்தனர். பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய விக்னேஷ் உள்ளிட்ட 6 பேரை பிடித்து மாம்பலம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.