பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை!

 
nn nn

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்  என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் 
என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.