"கூட்டணியிலிருந்து வெளியேறுபவர்கள் செல்லா நோட்டு" - பொள்ளாச்சி ஜெயராமன்

 
pollachi jayaraman

கூட்டணியிலிருந்து வெளியேறுபவர்கள் செல்லா நோட்டு என்று பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.

Annamalai

ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்தபோது, அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், தலைமைக் கழக நிர்வாகிகளும், பொதுச்செயலாளரும் கண்டனம் தெரிவித்து, கண்டனம் தீர்மானத்தை கூட நிறைவேற்றினோம். அதன் பிறகு அண்ணாமலை திருந்திவிட்டார் என்று பார்த்தால், பாஜகவை விட, தன்னை முன்னிலை முன்னிலைப்படுத்த, இப்போது அண்ணாவை விமர்சித்துள்ளார்.  நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், அப்போதும் திருந்தாமல், நேற்றைய பேட்டியில் தன்னை முன்னிலைப்படுத்த, கூட்டணி தர்மத்தை மீறி பேசியுள்ளார். இதை தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.  கூட்டணிக் கட்சிக்குள் இருந்துக்கொண்டு இப்படி பேசினால், எப்படி தொண்டர்கள் களத்தில் இணைந்து வேலை செய்வார்கள். உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Pollachi jayaraman

இந்நிலையில் கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், "அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு, டாலர் நோட்டு; கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.