ஜெயலலிதா பற்றி அறியாமல் பேசுகிறார் அண்ணாமலை - பொள்ளாச்சி ஜெயராமன்

 
pollachi jayaraman

ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டும் தான் கூட்டணி என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என பேசியிருந்தார். தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் அண்ணாமலை கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டும் தான் கூட்டணி என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா ஏராளமான சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதாவின் சாதனைகளை பொறுக்க முடியாமல் சிலர் காழ்ப்புணர்ச்சியில் பேசுகின்றனர். 1996 ஆம் ஆண்டு மட்டும் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர். அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதா பற்றி அறியாமல் அண்ணாமலை பேசுகிறார்
. இவ்வாறு கூறியுள்ளார்.