அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு : முக்கிய அறிவிப்பு இதோ!!

 
TTN

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான அனுமதி சீட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TTN

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு கடந்த 2019 நவம்பர் மாதம் பணி தேர்வு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.  கணினி வழியில்  அக்டோபர் மாதம்  தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில்  அக்டோபர் 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தது.

tngovt

இந்நிலையில் அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர் தேர்வு எழுதுவதற்குரிய ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை https://www.trb.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் டவுன் லோடு செய்து கொள்ளலாம்.பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி இடங்களில் சேர்வதற்கு வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  வெளிமாநிலத்தவர்கள் அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் விரிவுரையாளராக  தேர்வானால்  கிராமங்களில் தமிழ் வழியில் படித்து வரும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.