முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு!

 
ponmudi

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசி வருகிறார். 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ₹50 லட்சம் அபராதம் விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில்  தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குறிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன்முடி உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பொன்முடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசி வருகிறார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்தித்து பேசி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.