மாமன்னர் பூலித்தேவன் 308-ஆவது பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை!!

 
admk

மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, அதிமுக  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308-ஆவது பிறந்த நாளான 1.9.2023 - வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு, தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழகப் பொருளாளர்திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 19 பேர் மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தச்சை N. கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C. கிருஷ்ணமுரளி, M.L.A., தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S. செல்வமோகன்தாஸ்பாண்டியன், Ex. M.L.A., ஆகியோர் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

eps

மாவட்டங்களில், உடன்பிறப்புகளும் மாமன்னர் பூலித்தேவன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.