"ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம்" - அதிமுக போஸ்டரால் பரபரப்பு

 
ttn

நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ops

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு மூலம் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தான் வெளியிடும் அறிக்கைகளில் குறிப்பிடும், அதிமுக கொடியை பயன்படுத்துவதுடன், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருகிறார்.  இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்  ஓ. பன்னீர்செல்வத்தை கோமாளி போல சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
 

ttn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக ஒட்டியுள்ள போஸ்டர்களில்,  கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம்.. 1.1/2 கோடி கழக தொண்டர்கள் 2504 கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதோடு ஓ.பன்னீர்செல்வம் வகித்த அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக அனைத்து பதவிகளையும் நீக்கியும் கழகமும் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் OPS கோமாளியே! இரட்டை இலை சின்னத்தை பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும், தகுதியும், இல்லை பைத்தியமே! என்று அச்சிடப்பட்டுள்ளது.