முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஒத்திவைப்பு

 
mk stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

jallikattu

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் , தமிழ்நாடு முதலமைச்சர் முறையான சட்ட வல்லுநர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய பின்னர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதுமில்லை என்ற தீர்ப்பை பெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வருகிற 5ம் தேதி புதுக்கோட்டை அருகே திருச்சி தஞ்சை சாலையில் இடையபட்டி அருகே சிவப்பட்டியில் பிரம்மாண்ட முறையில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கும் விதமாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் , காளை வளர்ப்பவர்கள்,  ஜல்லிக்கட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொள்ளும்படி விழா நடத்த ஜல்லிக்கட்டு பேரவை முடிவு செய்திருந்தது.

tn

இந்நிலையில்  ஒடிசா ரயில் கோர விபத்து காரணமாக புதுக்கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஜூன் 5ம் தேதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.