அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..

 
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2022-23ம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி  பொது மாறுதல் கலந்தாய்வு மே 8-ல் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் நாளில் மலைச்சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.  

 பள்ளிக் கல்வி இயக்ககம்

அதன்பின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே   நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி,  2022-23ம் ஆண்டுக்கான  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.