முதலமைச்சரிடம் தான் பவர்.. சர்வாதிகாரியாக செயல்படும் ஆளுநர் - முத்தரசன் சாடல்..

 
முத்தரசன்

முதலமைச்சரிடம்தான் அனைத்து அதிகாரமும் உள்ளது என்றும், ஆளுநர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “ஆளுநர் ரவி முரண்பாடுகளை மட்டுமே உருவாக்குகிறார்; சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே கூறுகிறார். முதல்வர் யாரை விரும்புகிறாரோ அவரை அமைச்சராக தேர்வு செய்வார். ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சர்வாதிகாரி போல் ஆளுநர் செயல்படுகிறார்.

முத்தரசன்

ஆளுநர் ரவி எந்த முடிவையும் நிலையாக எடுக்காமல், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவரின் பொறுப்பிற்கும், செயல்பாட்டிற்கும் தொடர்பில்லாத வகையில் நடந்து கொள்கிறார். ஆளுநர் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் உள்ளன.  குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தற்போது மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்தி, பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.