பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு.. வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சோகம்...

 
1

அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன்,  அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தாயி(26) .  இரட்டை சிசுக்களுடன் 5 மாத கர்ப்பிணியாக இருந்த  ஆனந்தாயி நேற்று பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

parotta

பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்தன. சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2

பொதுவாகவே பெண்கள் கருவுற்ற பின்னர், உணவுகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . பழங்கள் காய்கறிகள் சத்துக்கள் நிறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும் என பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்துவர். கனமான உணவுகளை உண்பதால் பல்வேறு உபாதைகள் ஏற்படும்.. சில நேரங்களில் சிசுவுக்கோ அல்லது தாய்க்கோ அது ஆபத்தாகிவிடலாம்.