புத்தாண்டில் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா அஞ்சலி

 
பிரேமலதா

புத்தாண்டில் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரு மகன்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  கடந்த 4 அம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்ததற்கு பின்பாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலக வளாகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும்  பூஜைகள் செய்யலாம் என்றும், யார் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தலாம் எனவும் கூறிய பிரேமலதா விஜயகாந்த் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை விஜயகாந்த் நம்முடன் இருப்பார் என்றார். 

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரு மகன்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  தே போல தேமுதிக மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகளும் சமாதியில் தொட்டு வணங்கி தங்களது அஞ்சலி செலுத்தினர்.