”இந்திய அரசியல் வரலாற்றில் உலக சாதனை படைத்த ஒரே மாநாடு தேமுதிக மாநாடு”- பிரேமலதா

 
 பிரேமலதா   பிரேமலதா

25 லட்சம் பேருடன் உலக சாதனை படைத்த மாநாடு தேமுதிக முதல் மாநாடு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

premalatha vijayakanth


இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது” எனக் குறிப்பிடதக்கது.