சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா - ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்பு

 
chennai

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுள்ளார். 

சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர் தமிழகத்திற்கு வருவது இது முறையாகும். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றூ காலை மைசூர் வந்தடைந்த குடியரசுத் தலைவர், பின் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார்.  அங்கு, ஆஸ்கர் வென்ற 'The Elephant Whisperers' ஆவணப்பட புகழ் யானைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கரும்பு வழங்கினார். பின்னர், யானைப் பாகன்களோடு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து மைசூர் விமான நிலையம் சென்றடைந்த அவர், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். 

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.