தூத்துக்குடி துறைமுகத்தை பாராட்டிய பிரதமர் மோடி..

 
modi

பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்திருக்கிறார்.  

2022-ம் ஆண்டு உலக பூமி தினத்தையொட்டி தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், துறைமுகத்தில் உள்ள  மரங்கள் குறித்த வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   மேலும் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தை பாராட்டிய பிரதமர் மோடி..

 இது தொடர்பாக  பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள  பதிவில், “ சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.